முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பன்வாரிலாலிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர்.

இந்தியாவில் 18 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளனர். 

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் கவர்னரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து