முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைப்பு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திண்டுக்கலில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அரசு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது. புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும். 43,528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் . உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இ பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து