முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலத்தின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது நோக்கம் : காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பேட்டி

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் துணை நிலை கவர்னராக பணியாற்றி வந்த கிரிஷ் மர்மு தனது பதவியை ராஜினாமா செய்தார். கிரிஷ் மர்மு ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய கவர்னராக மனோஜ் சின்ஹா நியமித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நேற்று ஜம்மு காஷ்மீரின் 2-வது துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹா பதவியேற்று கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கம், எனக்கு இங்கே ஒரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 5 ஒரு முக்கியமான தேதி, பல வருடங்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் பிரதான நீரோடையாக வந்துள்ளது. பல திட்டங்கள் இங்கு தொடங்கியதும், அந்த திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது முன்னுரிமை என்றார். 

மேலும் யாருக்கும் எதிராக எந்த சார்பும் இருக்காது. அரசியலமைப்பு அதிகாரங்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும். மக்களுக்கு அவர்களின் உண்மையான குறைகளை கேட்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

தீர்வுக்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம். இங்குள்ள வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து