முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5,890 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      தமிழகம்

சென்னை : தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று புதிய உச்சமாக 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,235 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று 117 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று  மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து