முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் : பா.ஜ.க. மேலிடம் அனுமதி

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பா.ஜ.க. மேலிடம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக பா.ஜ.க. ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிவிட்டது. அமைச்சரவையில் தற்போது 28 பேர் உள்ளனர். இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்வர் எடியூரப்பா கடந்த வியாழன்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசினார்.  

அப்போது எடியூரப்பா, அமைச்சரவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டார். மேலும் தான் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத், ஆர்.சங்கர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் எடுத்துக் கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் முதல்வர் எடியூரப்பா 5 பேர் பெயர் அடங்கிய பட்டியலை ஜே.பி.நட்டாவிடம் வழங்கியதாகவும், அதில் 3 பேருக்கு அமைச்சர்பதவி வழங்க பா.ஜனதா மேலிடத்திடம் ஆலோசித்து விட்டு ஜே.பி.நட்டா அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எச்.விஸ்வநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்று உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. 

இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அதற்கு அவர், பிரதமர் மற்றும் கட்சி மேலிடத்திடம் ஆலோசித்து விட்டு அனுமதி வழங்கி உள்ளார் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து