முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அக். 1 - முதல் கலந்தாய்வு தொடங்கும்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். அக்டோபர் 1-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 

இங்கு கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு சமவாய்ப்பு எண், கடந்த மாதம் 26-ம் தேதி இணைய வழியில் ஒதுக்கப்பட்டது. 

இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில், கொரோனா காரணமாக மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், தரவரிசைப் பட்டியல் நேற்று (செப்.28)-ம் தேதி வெளியாகும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். 

அதனடிப்படையில், அமைச்சா் கே.பி.அன்பழகன் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். 

பொறியியல் ரேங்க் பட்டியலில் சஸ்மிதா என்ற  மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.  நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2-வது இடமும், காவ்யா என்ற மாணவி 3-வது இடமும் பெற்றுள்ளனர். 

நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 877- இடங்கள் உள்ளன. 

முதலிடம் பிடித்த மாணவி சஸ்மிதா கட் ஆப் - 199.67 ஆகும்.  http://tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறிந்து கொள்ளலாம்.

அக்டோபர் 1-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சர் அன்பழகன் கூறுகையில், முதல் 10 இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தரவரிசைபட்டியலில் தவறு இருந்தால், மாணவர்கள் புகார் அளிக்கலாம்.

அது பின்னர் திருத்தி வழங்கப்படும். 1,12,406 பேர் விண்ணப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு 27 கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

8 கல்லூரிகள் புதிதாக திறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இறுதிப்பட்டியல் 6-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து