முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த கேரளத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் நிலவும் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

கேரளத்தில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்துள்ளனர், 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,79,922 ஆக உயர்ந்துள்ளது. இதில் 697 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.59 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.   மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து