முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு வெள்ள அபாய நோட்டீஸ்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

நகரி : முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் உண்டவள்ளி வீட்டுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதி நீர் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. பிரகாசம் பேரேஜ் மேற்கு பகுதியில் நீர்மட்டம் 12 அடிகள் எட்டியுள்ளது. இந்த நிலையில் நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளில் நதிநீர் புகும் அபாயம் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

மொத்தம் 36 வீடுகளுக்கு இதுபோன்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.  இதில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் உண்டவள்ளி வீட்டுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து