முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

129-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மேயர் என். சிவராஜ் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 129-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மேயர் என். சிவராஜ் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேயர் என்.சிவராஜின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, என்.சிவராஜின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் (மக்கள் தொடர்பு) ச.சண்முகசுந்தரம், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து