முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் நேற்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று தனியார் மருத்துவமனையில் 29 பேர், அரசு மருத்துவமனையில் 41 பேர் என 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று 85,997 மாதிரிகளும், 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதுவரை 72,67,122 மாதிரிகளும், 70,50,820 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக இருந்தாலும், 5,36,209 பேர் குணமடைந்துள்ளதால் 46,281 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து