முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

 புதுடெல்லி : யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இதனைதொடர்ந்து நடந்த விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யு.பி.எஸ்.சி. பதில் அளித்தது. மேலும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக விளக்கமும் அளித்தது.

இந்தசூழலில் நீட். ஜே.இ.இ தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததை போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைத்தால் காலம் தோறும் பின்பற்றி வரும் சுழற்ச்சிமுறை பாதிக்கப்படும் என்றும் யு.பி.எஸ்.சி. பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது. 

இந்நிலையில் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று யு.பி.எஸ்.சி. நிர்வாகம் கூறியதை ஏற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து