முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை இறுதி கட்ட சோதனை வெற்றி

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை பொக்ரானில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கி உள்ளது. இதில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நாக் ஏவுகணையும் ஒன்று. எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் இறுதிக்கட்ட சோதனை நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.45 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான போக்ரானில் நாக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும்.   இந்த ஏவுகணையானது நவீன ரக வலுவான பீரங்கிகளையும் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து