முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கிழக்கு மாநிலங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களின் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.  இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் அக்டோபர் 23-ம் (இன்று) தேதி அன்று பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து