முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 4,314 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்- தமிழக சுகாதார துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,00,193-ஆக உயர்ந்துள்ளதாகவும் நேற்று மட்டும் 4,314 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,00,193 -ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,55,170 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4,314 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 833 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 92,75,108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று  மட்டும் 81,259 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 197 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 34,198  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,22,711 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 1,829 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,77,450 பேர் பெண்கள், நேற்று மட்டும் 1,248 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.  வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து