முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.  நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே  தெரிவித்து இருந்தார்.

இதற்கேற்ப கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர்.  

இந்த நிலையில் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயின் பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம், அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, குறித்து  பேசப்பட்டதாக கூறப்படுகிறது.   நிர்வாகிகளுடன் விஜய் பேசுகையில் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்,

வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும். தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.  ஆனால் இது ஒரு வழக்கமான சந்திப்பு என்று விஜயின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து