முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : விரைவில் சிறைக்கு சென்று சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். 

நடிகை கங்கனா ரனாவத் மும்பை  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது எனக் கூறி மராட்டிய மாநில ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. அதில் அவர் சட்டப்படி போராடி தடை வாங்கினார்.  தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வரவே அவர் மும்பையை விட்டு வெளியேறினார். இ

ருந்தாலும் மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மும்பை போலீசார் அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள கங்கனா ரனாவத் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல என்னையும் சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு!

இது என்னுடைய தேர்வுகள் சரியானது என்ற நம்பிக்கைற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து