முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி பெற உரிமை உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பூசி இறுதியாக ஒன்று தயாராகும்போது அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அடுத்த வாரம் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுதை முன்னிட்டு, பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இலவச கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.  

இந்நிலையில் டெல்லியின் சாஸ்திரி பூங்கா மற்றும் சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய மேம்பாலங்களைத் திறந்து வைத்த அரவிந்த் கெஜ்ரிவால், கோவிட் தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், 'முழு நாட்டிற்கும் இலவச கோவிட் தடுப்பூசி கிடைக்க வேண்டும்.

இது அனைவருக்குமான உரிமை. இந்திய மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து