எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு, செக்காணூரணியில் வைத்து தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியில் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அருள்மிகு.மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரசாதம் வழங்கி எழுச்சிமிகு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடி தங்களது இன்னுயிரை ஈந்து வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை அரசு விழா நேற்று திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்று தமிழக அரசின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திடுவதற்காக திருப்பத்தூர் சென்றிடும் வழியில் தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செக்காணூரணி பகுதிக்கு வருகை புரிந்தார்.அப்போது தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து துணை முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புத்தகம் கொடுத்து அன்புடன் வரவேற்றார்.
பின்னர் மதுரை அருள்மிகு.மீனாட்சியம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்கிட தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.பிறகு செக்காணூரணி பகுதி கோவில் பூசாரிகள் சார்பில் துணை முதல்வருக்கு ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு பூரண கும்பமரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று கும்பங்களை கையில் ஏந்தியபடி வெற்றிக் குலவையிட்டு துணை முதல்வருக்கு எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.இதையடுத்து கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேவர் சிலை பகுதியில் திரண்டு வந்து மலர்கொத்து கொடுத்தும்,சால்வைகள் கொடுத்தும் துணை முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எழுச்சிமிகு வரவேற்பு நிகழ்ச்சியினை கண்டு மனம் நெகிழ்ந்த தமிழக துணை முதலமைச்சர்,கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு காரிலேறி திருப்பத்தூரில் நடைபெறுகின்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன்,மாவட்ட துணை,இணைச் செயலாளர்கள் பஞ்சம்மாள்,பஞ்சவர்ணம்,பொருளாளர் திருப்பதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் தமிழழகன்,மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சதீஷ்சண்முகம்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர்,மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சிங்கராஜபாண்டியன்,மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருமங்கலம் அன்பழகன்,கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ராமசாமி,சேடபட்டி பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா,அலங்கை ரவிச்சந்திரன்,
யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சி மகாலிங்கம்,சண்முகப்பிரியா பாவடியான்,துணை சேர்மன்கள் வளர்மதி அன்பழகன்,கலையரசி கண்ணன், முனியம்மாள், முன்னாள் துணை சேர்மன்கள் கண்ணன்,பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன், ஐ.டி.விங் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மதுசூதனன்,இணைச் செயலாளர்கள் ஜெய.சி. செல்வகுமரன்,கீதாலெட்சுமி, ஆனந்த்,கார்த்திக்,மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்பரசன், ராம்குமார், பசும்பொன்ராஜன், பிரபு, சிவபாலபாண்டியன், பொருளாளர் நவநீதகண்ணன், திருமங்கலம் ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் விவேக், நகர் செயலாளர் விஜயகுமார், திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார், சுமதிசாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, சிவபிரியா, லட்சுமி, சஞ்சய்காந்தி, வாகை ஆண்டிச்சாமி, கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், துரைப்பாண்டி,ராஜசேகர் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி, ஆலம்பட்டி ஜெகன்,செக்காணுரணி பஞ்சாயத்து தலைவர் நர்மதா கபிகாசிமாயன், முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், வெல்டிங் முருகன், கப்பலூர் தீபாஆறுமுகம், ராஜாமணி, பேரவை ஜி.பாண்டி, சிவகுமார், ராஜாமுகமது, ஆனந்த், இளைஞரணி பொன்னமங்கலம் ஜெயமணி,பிரபு,பி.ஆர்.சி.அழகர்சாமி,தளபதிசெல்வா, புங்கங்குளம் ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நகர,ஒன்றிய,பேரூர் மற்றும் கிளை கழகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.