முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு உற்பத்தியாளரான பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை சீன சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு அந்த நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்ய சீன சுங்க அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானால் அந்நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்ய ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா உறுதியானால் ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என சீன சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கொரோனா தொற்றுநோய் பெரும்பாலும் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பெரும்பகுதிகளில் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது, இருப்பினும் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் சமீபத்தில் நோய் பரவல் தோன்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து