முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் தகவல்: மதுரையில் வெளுத்துக்கட்டிய மழை

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் மதுரையில் கொட்டத் தொடங்கிய மழை இரவு வெகுநேரம் நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் இந்த மழை மதுரை நகரையே ஒரு கலக்கு கலக்கியது என்றே சொல்லலாம்.

சமீப காலமாக பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் தற்போது உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து