முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் கொரோனாவை விட கொடிய நோய்கள் : ஐ.நா.வின் அறிவியல் கொள்கை குழு தகவல்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்கள் நமக்காக காத்திருக்கின்றன என ஐ.நா.வின் அறிவியல்-கொள்கை குழு கூறி உள்ளது.

இது குறித்து ஐ.நா.வின் அறிவியல்-கொள்கை குழு தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா போன்ற தொற்றுநோய்கள் அடிக்கடி நிகழும், அதிகமான மக்களை கொன்று, உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான சேதத்தை உருவாக்கும்.

இயற்கையை மரியாதையுடன் நடத்துவதில் அடிப்படை மாற்றம் இல்லாவிட்டால் இப்படி கண்டிப்பாக நடக்கும். கொரோனா வைரசை போலவே விலங்குகளில் இன்னும் 850,000 வைரஸ்கள் உள்ளன என்றும் அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  தொற்றுநோய்கள் மனிதகுலத்திற்கே ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

1918-ன் இன்ப்ளூயன்ஸா பரவியதிலிருந்து, கொரோனா உலகை தாக்கியிருக்கும் ஆறாவது தொற்றுநோயாகும் என்றும் இவை அனைத்துக்கும் மனித நடவடிக்கைகளே முழுமையான காரணம். மனிதர்கள் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளுடன் அதிக அளவில் நெருங்கிய தொடர்பை கொள்கிறார்கள்.

இதனால் விலங்குகளில் இருக்கும் நோய்களுடனும் மனிதர்களுடைய தொடர்பு அதிகரிக்கிறது இதனால் கொடிய நோய்கள் உருவாகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து