முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 

வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. 

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் பட்டேலுக்கு குஜராத்தின் கெவாடியா நகரில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.  ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன், 182 மீட்டர் உயரத்துடன் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது.  பட்டேலின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். 

இதேபோன்று, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையின் காலடியில் பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.  

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்.  சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று அவர் அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து