முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து:சுகாதாரத்துறை

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் டெல்லி தலைநகரில் அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், 

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கொரோனா மருந்து வழங்கப்படும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து