முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2-வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் இந்த மைல்கல் திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் தரப்பில் டுவிட்டர் பதிவில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் எனவும் அந்த டுவிட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து