எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட்டானது.
தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தாகூர் 2 விக்கெட்டையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8 ரன்), கேப்டன் அஜிங்யா ரஹானே (2 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியை விட 33 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் 21 ரன் அடித்தது. வார்னர் 22 பந்துகளில் 22 ரன்களும், மார்கஸ் 14 பந்துகளில் 1 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்க்கஸ் ஹாரிஸும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். 24.6 ஓவரில் 82 பந்துகளில் 38 ரன் அடித்த மார்க்கஸ் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 25.6 ஓவரில் 75 பந்துகளில் 48 ரன் அடித்த வார்னர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய மார்னஸ், ஸ்டீவ் சுமித் ஆகியோர் இணைந்து ரன் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அந்த கூட்டணியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 303வது ஓவரில் 22 பந்துகளில் 25 ரன் அடித்த மார்னஸ் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் பின்னர் களம் இறங்கிய மேத்யூ வேட் அதே ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய கேம்ரூன் ஸ்டீவ் சுமித்துடன் இணைந்து ரன் அடிக்க முயன்றார். 54.2 ஓவரில் 74 பந்துகளில் 55 ரன் எடுத்த ஸ்டீவ் சுமித் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் டிம் பெயின் களம் இறங்கினார்.
60.5வது ஓவரில் 90 பந்துகளில் 37 ரன்கள் அடித்த கேம்ரூன் தாக்கூர் பந்துவீச்சிலும் அவரைத் தொடர்ந்து 64.6வது ஓவரில் 37 பந்துகளில் 27 ரன்கள் அடித்த கேப்டன் டிம்பெயின் அவட்டாகி வெளியேற பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இணைந்து ரன் எடுக்க முயன்றனர். 66.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புகள் 243 ரன்கள் அடித்திருந்தது. சிராஜ், தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பேட் கம்மின்ஸ் 16 பந்துகளில் 2 ரன்களும், ஸ்டார்க் ஒரு பந்தில் ஒரு ரன்னும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் ஆட்டம் தொடங்கியது. 67.3வது ஓவரில் 4 பந்துகளில் 1 ரன் அடித்த ஸ்டார்க் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய நாதன் லயன் 10 பந்துகளில் 13 ரன் அடித்த நிலையில் தாக்கூர் பந்து வீச்சிலும், ஹேசில்வுட் 11 பந்துகளில் 9 ரன்களில் அடித்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 75.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் அடித்தது. பேட் கம்மின்ஸ் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வீரர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களும், 2-வது இன்னிங்சில் 294 ரன்களும் அடித்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் அடித்து 33 ரன் பின் தங்கிய நிலையில் இருந்தது. தற்போது இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 1–1 என்ற இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் 2வது இன்னிங்சில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுமா? அல்லது டிரா செய்ய முயற்சி செய்யுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். 1.5 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 10 பந்துகளில் 5 ரன்களும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.