முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீட்டு கழகத்தில் பணி நியமன ஆணைகள்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழில் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 12 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப, கருணை அடிப்படையில் உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை ஈட்டிய நிகர இலாபத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 2017-18ஆம் ஆண்டிற்கு ஒரு கோடியே 86 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை தமிழக முதல்வரிடம் அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  சிஜி தாமஸ் வைத்யன், சர்க்கரை துறை ஆணையர் டாக்டர் இரா. ஆனந்தகுமார், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் தலைவர் இராஜசேகர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் பால் பிரின்சி ராஜ்குமார்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து