முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக 3 நாள் பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.  இதற்காக விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை வந்தார்.

அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, முத்தையாபுரம், முக்காணி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் மாலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதனை தொடர்ந்து நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று பிற்பகல் தென்காசி மாவட்டம் செல்லும் அவர் இன்று (மார்ச் 1) கன்னியாகுமரி செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து