முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர்  எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் முதல்வர்  எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதித்துறையை முதல்வர்  எடியூரப்பா தன்வசம் வைத்துள்ளார். கர்நாடகத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 8-ம் தேதி முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்ய உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு நிதி நிலை மோசமாக இருப்பதால், இந்த பட்ஜெட்டில் பெரிய  அளவில் வரி விதிப்புகள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும் முதல்வர்  எடியூரப்பா பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடா்பாக அனைத்து துறை அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி இருந்தார். 

இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- 

கர்நாடக அரசின் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அடுத்த மாதம் மார்ச் 8-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளேன். விவசாயிகள், தினக்கூலிகள் உள்பட மாநிலத்தின் ஆறரை கோடி மக்கள் விரும்பும் வகையிலும், மாநில மக்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்கும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்வேன். மாநிலத்தின் ஆறரை கோடி மக்களும் அரசிடம் இருந்து எப்படி சலுகைகள், எதிர்ப்பார்ப்புகளை கொண்டு உள்ளார்களோ? அதற்கு ஏற்றவாறு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அதனை மனதில் வைத்து கொண்டு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கர்நாடகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். அதுவே எனது நோக்கம், குறிக்கோள். மாநிலத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் கர்நாடகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். 

நாட்டிலேயே கர்நாடகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதலாவதாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கர்நாடகம் இருக்க வேண்டும். இதுவே என்னுடைய வாழ்நாளின் கனவு, ஆசை. இதற்காக தான் உழைத்து வருகிறேன். பட்ஜெட் தயாரிப்பு குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

அவர்களது கருத்துகளையும் கேட்டு அறிந்து கொண்டேன். ஒவ்வொரு துறைகளின் வளர்ச்சிக்கும், அந்த துறைகளுக்கு எந்த சலுகைகள் தேவை என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொண்டுள்ளேன்.  மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார்.

மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வந்து அவர் செயல்படுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நமது நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் நிலையே முற்றிலும் மாறி வருகிறது. மக்களின் ஆசிர்வாதத்தால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைய இருப்பது உறுதி. மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து