எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற தேசிய செட்டியார்கள் பேரவை மாபெரும் மாநில மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
வாணிபத்தையும், விவசாயத்தையும் முக்கிய தொழிலாகக் கொண்டு, தாங்களும் சிறப்பாக வாழ்ந்து, தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் பல்வேறு பண்பாட்டு கொடைகளை வழங்கிய செட்டியார் சமுதாய பெருமக்கள் அனைவரையும் வணங்கி, இந்த மாநாடு சிறக்க எனது வாழ்த்துகளை முதலில் உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள செட்டியார் சமூகத்தில் 114-க்கும் மேலான உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, நடத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த அமைப்பில் இதுவரை ஆன்லைனில் மட்டும் சுமார் 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பதனை அறியும் பொழுது, இந்த அமைப்பு, இந்த சமுதாய மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடம் பெற்று வரும் ஆதரவும், வலிமையும் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
சுதந்திர போராட்ட வீரர் சிங்கம் செட்டியார் மற்றும் கண.முத்தையா செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், கல்வி கொடை வள்ளல் ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார், யாழ்ப்பாண வைத்தீஸ்வரர் ஆலயம் எழுப்பிய வைத்தியலிங்கம் செட்டியார், கல்விக்கொடை வழங்கிய ராஜா அண்ணாமலை செட்டியார், கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், அவிநாசிலிங்க செட்டியார், தியாகராஜ செட்டியார், கவியரசு கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட இச்சமுதாய பெருமக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, சமுதாய கொடைகளையும், அவர்களது பங்களிப்பையும், எண்ணிப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இவர்களால் இந்த சமுதாயம் உயர்வு பெற்றுள்ளது, ஏற்றம் பெற்றுள்ளது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
தமிழர்கள், சங்க காலம் தொட்டே உள்நாட்டிலும், கடல் கடந்து வெளிநாடுகளிலும், குழுக்களாக வாணிபம் செய்து வந்துள்ளனர். நிகமம், மணிக்கிராமம், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசிகள், வலஞ்சியர், சித்திரமேலி பெரியநாடு, அஞ்சு வண்ணம் போன்ற பல்வேறு வணிக குழுக்கள் பண்டை காலங்களில் இருந்ததை நாம் அறிய முடிகின்றது.
சிலப்பதிகார தலைவன் கோவலன் தந்தை மாசாத்துவன் என்றும், கண்ணகியின் தந்தை மாநாயகன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். சாத்து என்றால் தரைவழி வணிகக் குழு ஆகும். அதுபோன்றே, நாவிகர் என்றால் கப்பலை உடையவர் என்று பெயர். எனவே, பெரிய கடல் வணிகருக்கு மாநாவிகர் என்று பெயர். இது மருவி மாநாயகன் ஆகியது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கடல் வணிகம் மூலம் அயல்நாட்டினருடன் நல்லுறவு கொண்டு இருந்தனர். அதே நேரத்தில், கடல் வணிகம் கட்டுப்படுத்தப்பட்ட பொழுது, அந்நாடுகளுக்கு படையெடுத்துச் சென்று நிலைமையை சீர் செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகின்றது.
அம்மாவின் அரசு, சாலையோர சிறு வியாபாரம் செய்வோர் முதல் மிகப்பெரிய வணிகர்கள் வரை, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகின்றது. அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் நிலையை அம்மாவின் அரசால் மட்டுமே தமிழ்நாட்டில் உருவாக்கித் தர முடியும் என்பதை நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உணர்கின்றனர்.
வியாபாரத்திற்கு, விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி மிகவும் இன்றியமையாதது. விவசாயத்திற்கும், தொழிலுக்கும் அம்மாவின் அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெரும் புரட்சி கண்டு வருகிறது. விவசாயத்திற்கு நீர் அவசியம் என்பதாலேயே நீர் மேலாண்மையில் அம்மாவின் அரசு அதிக கவனம் செலுத்தி, இன்று தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக உருவாக்கி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் கூட அதிக அளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டிற்கு அம்மாவின் அரசு பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையினரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, தமிழ்நாடு மொழிவழி சிறுபான்மையினர் சமூக, பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தினை உருவாக்கி உள்ளது.
அம்மா சமூக நீதி காத்த வீராங்கணை வழியில் அம்மாவின் அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய விகிதாச்சார வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது. அம்மாவின் அரசு, என்றென்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு, அவர்களை காப்பதில் என்றென்றும் முன்னோடியாக விளங்குகின்றது.
கல்விக் கொடை, சமயக் கொடை மற்றும் பல்வேறு அறச்செயல் மூலம் இன்று உலகமெங்கும் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் பரவியதற்கு பெரும் பங்கு வகித்த இச்சமுதாய மக்களுக்கு, தமிழ்நாடு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சமுதாய மக்கள் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ளவர்கள். சிறுவயதில் எனது ஊருக்கு அருகில் உள்ள கோனேரிப்பட்டியில் தான் பொருட்கள் வாங்க செட்டியார் கடைக்கு சென்று வாங்குவோம். ஏனென்றால் அவர்களிடம் பொருள் நன்றாகவும், தரமாகவும் இருக்கும் என்று பொதுமக்களால் நம்பக்கூடியவர்கள்.
தமிழகம் முழுவதும் பரவி இருக்கின்ற சமுதாயம் செட்டியார் சமுதாயம். அனைத்து பகுதிகளிலும் வாணிபம் செய்து வருகின்றனர். இந்தப்பகுதியில் எந்த அரசியல் கட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றது என்று கேட்டால் அவர்கள் தான் சொல்லுவார்கள். மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்தவர்கள் இந்த சமுதாய மக்கள். அ.தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்கள். அதற்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.