முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

தஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து பா.ஜ.க. தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் இளங்கோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் மார்ச் 10-ம் தேதி மாலை 5 மணிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திலுள்ள 20 தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார்.

இக்கூட்டத்தில், ஒரு லட்சம் தொண்டர்களைப் பங்கேற்கச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். டெல்டா மாவட்டங்களில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது என்பதைப் பறைசாற்றும் விதமாக இக்கூட்டம் அமையும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து