முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சனிக்கிழமை, 20 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டோக்கியோ : ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அருகே நேற்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. 

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலையில் 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ந் தேதி வரை பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. 

இதற்கான முன்னேற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்த சூழலில் தலைநகர் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி அறிவுறுத்தல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என அந்நாட்டு வானிலை கழகம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து