முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலி

சனிக்கிழமை, 20 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கையில் நேற்று காலையில், பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானார்கள்.

இலங்கை தலைநகர் மத்திய கொழும்பிலிருந்து கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசாரா நகருக்கு அருகே நேற்று காலையில் பஸ் ஒன்று, செங்குத்துப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 13 பேர் பலியானதும் 31 பேர் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை காவல்துறை அதிகாரி அஜித் ரோஹானா கூறி இருப்பதாவது:–

போலீசாரின் தொடக்க நிலை விசாரணையில், விபத்துக்குள்ளான பஸ்சில் 70 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் போலீஸ் அதிகாரி கூறி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து