எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக அவருக்கு கலைநிகழ்ச்சிகள், விளம்பர பதாகைகள் , தோரணங்கள் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மேலூர் வேட்பாளரை ஆதரித்து வேனில் இருந்தபடியே பேசிய எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
கிராமம் சூழ்ந்த பகுதியான மேலூர் ஏற்றம் அடைய வேண்டும் என பலமுறை தற்போதைய வேட்பாளர் பெரியபுள்ளான் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தவர். கிராம பகுதியாக உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்று, விவசாயம் செய்ய நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் நீர்மேலாண்மையில் விருது வாங்கியுள்ளோம். நீர்நிலைகளை தூர்வாரி, வேளாண் பணி இந்தாண்டு சிறப்படைந்துள்ளது.
50 ஆண்டுகளில் மேட்டூர், முல்லை பெரியாறு அணை இரண்டும் நிரம்பியது இந்தாண்டு தான். ஆனால் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகின்றார். விழுப்புரம் கூட்டத்தில் என்னை பற்றியே பேசி விட்டு செல்கின்றார். விவசாயிக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதனை நாங்கள் தான் செய்து வருகின்றோம்.
விவசாயியும் ரவுடியும் ஒன்னா..! விவசாயியை கொச்சைபடுத்தி ஸ்டாலின் பேசுகின்றார். நான் விவசாயி என்று கூறும் போது ஸ்டாலின் பொங்கி எழுகின்றார். நாட்டின் முதுகெழும்பு விவசாயி, ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைபடுத்தி பேசினார் அப்படி பேசினால் எதிர்கட்சி கூட அவருக்கு கிடைக்காது. விவசாயிகள் என்றால் தீண்டத்தாகவர் போல ஸ்டாலின் நினைக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா. அவர் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்டாலின் அணிந்திருக்க செருப்பை விட ஒரு ரூபாய் குறைந்தவன் நான் என என்னை விமர்சனம் செய்கின்றார். அவர் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் அவர். ஆனால் நான் விவசாயியாக இருக்கின்றேன். கண்ணுக்கு தெரியாத காற்றையே ஊழல் செய்தவர்கள் தான் அவர்கள். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள். விவசாயிகளிடம் எங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும். ஒருவரை சிறுமைப்படுத்தி பேசுவதால் அவர்களுக்கு சறுக்கல் ஏற்படாது. நன்மதிப்பு தான் ஏற்படும். தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கட்சி தி.மு.க. நாட்டு மக்களுக்காக தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது வெறும் கம்பெனி. வாரிசு அரசியலை செய்கின்றனர். கொள்ளையடிப்பதில் தி.மு.க.வினர் மன்னர்கள். தி.மு.க. அராஜக, ரவுடி கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது.. நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்..
அதிகாரிகளையும், டி.ஜி.பி.யையும் உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகின்றார். காவல்துறையின் உச்சபட்ச அதிகாரியை மிரட்டுகின்றனர் என்றால் நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். கட்டபஞ்சாயத்து, ரவுடிசம் தி.மு.க. வந்தால் தலைதூக்கி விடும். சாதிசண்டை, மதசண்டை இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றோம். தி.மு.க. வந்தால் நாடு தங்காது..
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்களுக்காக உழைத்து மறைந்தனர். அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அந்த வழியிலே அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றது. 41 சதவீதம் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ கனவை, நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட வழங்கி 435 மாணவர்கள் மருத்துவ படிப்பை இந்தாண்டு மேற்கொள்கின்றனர்..மருத்துவ கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாயி தான், விவசாயியின் எண்ணங்களை பார்க்க முடியும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கல் இடம்பெற்றுள்ளன. அதில் 100 நாள் பணியை 150 நாட்களாக உயர்த்தப்படும் கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும். நகைகடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக தேர்தல் அறிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பெண்கள் சுமையை குறைக்கும் விதமாக அரிசி அட்டைதாரர்களுக்கு வாஷிங்மிஷின் வழங்கப்படும், பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும், ரேசன் பொருள் வீடு தேடி வரும்,18 வயது நிரம்பியவர்களுக்கு அரசாங்கமே ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும். தை பொங்கல் கொண்டாட கடந்தாண்டு 1000 தந்தோம். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு 2500 ருபாய் தந்தது அதிமுக. வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
பிரச்சாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மதுரை வக்பு வாரிய தாளாளர் ஜபார், மேலூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்ராஜேந்திரன், வெற்றிச்செழியன், குலோத்துங்கன், மேலூர் நகர் கழகசெயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அன்புச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல மண்டல துணைத் தலைவர் கௌரிசங்கர், மேலூர்நகர்அம்மா பேரவை சாகுல்ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் மீரா உசேன், இளையராஜா, உமாபதி, எம்.கே.பி.அருண், மணிவாசகம், மொண்டி, சன்மார்க்கம், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, சரவணகுமார், உதயசங்கர், உதயகுமார், சிவா, கரும்புச்செல்வம், உட்பட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க