எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிவகங்கையில் நடந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரத்தால் எனக்கு தொண்டை கட்டிவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு தனது பேச்சை தொடர்ந்த முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது,
அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது. உலகிலேயே பொய் பேசுபவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். அவர் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அவர் தயார்தானா? இதே திருப்பத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க தயாராக உள்ளேன். இரு தரப்பையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் இறுதி தீர்ப்பு கூறட்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருநாளும் பலிக்காது.
நான் விவசாயம் செய்வதால் விவசாயி என கூறி வருகிறேன். ஆனால் இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவதூறாக பேசுகிறார். நான் விவசாயி என்பதில் உனக்கு என்ன கஷ்டம்? ஏன் கோபம் வருகிறது? அ.தி.மு.க. அமைத்திருப்பது வெற்றி கூட்டணி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் வந்து விடும். யாரும் வியாபாரம் செய்ய முடியாது. ஓட்டையும் போட்டு அடியும் வாங்கணுமா? இது தேவையா நமக்கு? ஆட்சி அதிகாரம் இல்லாத போதே தி.மு.க.வினர் அட்டூழியம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?
அம்மா வழியிலான அரசு சட்டம்-ஒழுங்கை பேணி காத்து வருகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்த நிலை தொடர வருகிற சட்டமன்ற தேர்தல் மூலம் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக உங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் வாய்தா வாங்கி வருகின்றனர். ஊழல் செய்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமா? ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. தற்போது தி.மு.க.வில் வாரிசு அரசியலாக உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. பெருந்தலைவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைகள் மாற வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.