முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பரிதாப பலி

சனிக்கிழமை, 27 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டின் லக்சர் நகரத்திலிருந்து புறப்பட்ட ரயிலும் அலக்ஸ்ஸாண்டிரா என்ற இடத்திலிருந்து புறப்பட்ட ரயிலும், சோஹக் மாகாணத்தின் தஹ்தா என்ற நகரத்தில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 32 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் 165 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல, 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

ரெயிலில் அவசர காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் பிரேக்கை மர்ம நபர்கள் இயக்கியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த விபத்து அலட்சியம் அல்லது ஊழல் போன்ற காரணங்களால் நடந்திருக்கலாம். அது எப்படியாக இருந்தாலும் சம்பந்தபட்டவர்கள் மீது நேரம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பொலி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து