முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு: குழந்தை உள்பட நான்கு பேர் பலி

வியாழக்கிழமை, 1 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆரெஞ்ச் நகரில் உள்ள 202 டபிள்யூ. லிங்கன் அவென்யூவில்  இரண்டு அடுக்கு வணிக வளாகத்தில்  மரம் நபர் ஒருவர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.  போலீசாருடனான துப்பாக்கிச் சூடு மோதலில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் போலீசார்  உறுதிப்படுத்தி உள்ளனர். 

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரின் நிலைமை குறித்து தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், எதற்காக என்ற விவரம் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.  அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 3-வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து