முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை: பிரதமர் ஜெசிண்டா அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

கடந்த 5–ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து தற்போது 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் சொந்த குடிமக்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடை விதிப்பானது ஏப்ரல் 28–ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து