எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் நதீமிடம் கேட்ச் ஆனார் படிக்கல். அவர் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த ஷாபாஸ் அஹமது 10 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு கேப்டன் கோலியுடன் இணைந்தார் கிளன் மேக்ஸ்வெல். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட, பெங்களூரின் ரன் வேகம் குறைந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்களே எடுத்திருந்தது பெங்களூர்.
நதீம் வீசிய 11-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, பெங்களூரின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. அந்த அணி 12.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கோலியின் விக்கெட்டை இழந்தது. அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 1, வாஷிங்டன் சுந்தர் 8, டேன் கிறிஸ்டியான் 1, கைல் ஜேமிசன் 12 ரன்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணியில் ரித்திமான் சாஹா 1 ரன்னில் வெளியேற, கேப்டன் டேவிட் வார்னருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி வேகமாக ரன் சேர்க்க, ஹைதராபாதின் ஸ்கோர் உயர்ந்தது. 31 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 37 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் வெளியேற, மணீஷ் பாண்டே 39 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு அப்துல் ஸமாத் டக் அவுட்டாக, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனிடையே விஜய் சங்கர் 3, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் வெளியேற, ஹைதராபாதின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை வீசிய ஹர்ஷால் படேல் நோபாலை வீச, அதில் ரஷித்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. எனினும் அடுத்த பந்தில் ரஷித்கான் (17 ரன்கள்) ரன் அவுட்டாக, 5-ஆவது பந்தில் நதீம் டக் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வி கண்டது .
பெங்களூர் தரப்பில் ஷாபாஸ் அஹமது 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
4 வருடங்களுக்கு பிறகு....
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி தனது மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஐதராபாத் பந்துவீச்சில் ஆர்.சி.பி வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிக்கொடுக்க மேக்ஸ்வெல் தனிஆளாக போராடினார். கடைசி பந்துவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 59 ரன்கள் விளாசினார். இந்த ஐ.பி.எல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
2016 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசியுள்ளார். 2019-ம் ஆண்டு மேக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை. அதுமட்டும் இல்லை போன வருடம் ஐ.பி.எல் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல்லுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம் என்றால் அது 2014-ம் ஆண்டு தான். அந்த சீசனில் தான் 552 ரன்களை விளாசினார். அதிகப்பட்சமாக 95 ரன்களை விளாசியிருந்தார்.
நிறைவேறிய கோலியின் விருப்பம்
போட்டிக்கு பின் பேசிய மேக்ஸ்வெல், கோலியும், நானும் எப்போதாவது மெசேஜ் செய்வோம். உரையாடலின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவது குறித்து என்னிடம் பேசினார். ஆர்.சி.பி அணியில் உங்களை சேர்க்க விரும்புகிறோம் என்றார். ஐ.பி.எல் ஆக்ஷன் நடந்தபோது மேக்ஸ்வெல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார். அவருடன் ஆடம் சாம்பா இருந்துள்ளார். ஆர்.பி.சி அணிக்காக ஏலம் எடுத்த தகவல் மேக்ஸ்வெல்லுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம் சாம்பா ஏற்கெனவே ஆர்.சி.பி அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். தன்னிடம் இருந்த ஆர்.சி.பி தொப்பியை எடுத்து மேக்ஸ்வெல்லுக்கு அணிவித்துள்ளார். அதோடு நிற்காமல் அதனை புகைப்படமாக எடுத்து நான் தான் முதலில் மேக்ஸ்வெல்லை ஆர்.சி.பிக்காக வரவேற்றுள்ளேன் என கோலிக்கு டெக்ஸ்ட் பண்ணியுள்ளார். இதற்கு ரிப்ளே அளித்த கோலி முட்டாள்கள்.. இருந்தாலும் இந்த வழி நன்றாகத்தான் இருக்கிறது” எனக் கமெண்ட் செய்துள்ளார். ஏனென்றால் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் அணியில் சேர்க்க விரும்பியதே கோலிதான் என்று அவருக்கு தெரியாது.
நம்பிக்கை இழக்காத கோலி
வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், நாங்கள் பெருமைப்படுவது போல் ஆடாவிட்டாலும் இது எங்களுக்கு ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. ரன் எடுக்க சவாலாக இருந்தது. இதனை மும்பை-கே.கே.ஆர் போட்டியின் போது பார்த்தோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. நடுத்தர ஓவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.
149 ரன்கள் எடுத்தாலும் சேசிங்கில் ரன் எடுக்க கடினமாக இருக்கும் என்பதால் வெல்ல முடியும் என சொன்னேன். தொடக்கத்தில் நாங்கள் அதிக ரன் அடிக்காவிட்டாலும் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடினார். அவரின் இன்னிங்ஸ் எங்களுக்கு வித்தியாசம் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்வதென்றால் இந்த வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை, என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.