முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சரத்பவார்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த சரத்பவார் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 80). பித்தப்பை கல் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பித்தப்பையில் இருந்த ஒரு கல் எண்டோஸ்கோபி முறையில் கடந்த மாதம் 30-ம் தேதி அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுக்காக அவர் வீடு திரும்பினார். 

இதைதொடர்ந்து லேப்ரோஸ்கோபி முறையில் பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் சமீபத்தில் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு லேப்ரோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  இந்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து