முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.  இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளேன். மேலும், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிர்வாகத்துடன் 19-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளேன். 

மேலும், நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் கடைசி 7 நாள்களிலும், 44 மாவட்டங்களில் 28 நாள்களில் புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. 

கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களிடம் உற்பத்தியை அதிகரிக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். மருந்துகளை அனுமதி இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து