முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது, 

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.  

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். இன்று 17-ம்  தேதி முதல் 19-ம்  தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி 9 செ.மீ., மஞ்சலாறு, நத்தம் தலா 7 செ.மீ., மதுரை விமான நிலையம் 6 செ.மீ., சாத்தூர், காரியாபட்டி, திருமங்கலம், பெருந்துறை தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து