முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடை நம்பிக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

தஞ்சை : தஞ்சாவூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் அறிவுடைநம்பி. தேர்தலின் போது முழு வீச்சில் பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரித்த அவர் அண்மையில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்த பிறகு உடல் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், தஞ்சாவூர் திலகர் திடல் பகுதியில், தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அறிவுடைநம்பி சிகிச்சை பெற்று வருகிறார்.  கொரோனா இரண்டாம் அலையில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து