முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் :  நடிகர் விவேக், நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற, க்ரீன் கலாம் என்ற அமைப்பை விவேக் உருவாக்கினார். இந்த திட்டத்தின் கீழ் விவேக் இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். 

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி., சந்தோஷ் குமார், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற விவேக்கின் கனவை தான் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். க்ரீன் கலாம் திட்டத்தை தான் முழுமை அடைய செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து