எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 9-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. மும்பை அணியில் மார்கோ ஜேன்சனுக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் 4 மாற்றமாக டி.நடராஜன், விருத்திமான் சஹா, ஜாசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு விராட் சிங், அபிஷேக் ஷர்மா, முஜீப் ரகுமான், கலீல் அகமது இடம் பெற்றனர்.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரும், குயின்டான் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்து பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினர். முஜீப் ரகுமான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்சர்களை ஓடவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன் திரட்டினர். இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். அவர் வீசிய பந்தை ரோகித் சர்மா (32 ரன், 25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் (10 ரன்) சிக்கினார்.
இதன் பிறகு மும்பையின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. 10 முதல் 16-வது ஓவர் வரை பந்து ஒரு தடவை மட்டுமே எல்லைக்கோட்டை தொட்டது. குயின்டான் டி காக் 40 ரன்னிலும் (39 பந்து, 5 பவுண்டரி), களம் கண்டது முதலே தடுமாறிய இஷான் கிஷன் 12 ரன்னிலும் (21 பந்து) நடையை கட்டினர்.
கடினமான இந்த ஆடுகளத்தில் கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆறுதல் அளித்தார். சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்சர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்சராக்கி 150 ரன் என்ற சவாலான ஸ்கோரை அடைவதற்கு வழிவகுத்தார். இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னில் வீழ்ந்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. பொல்லார்ட் 35 ரன்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), குருணல் பாண்ட்யா 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் விஜய் சங்கர், முஜீப் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களம் புகுந்தனர். அதிரடி காட்டிய பேர்ஸ்டோ, வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்சர் தெறிக்க விட்டார். இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து திடமான நிலையில் காணப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ (43 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். இதே போல் வார்னர் (36 ரன், 34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தேவையில்லாமல் ஓடி ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. மிடில் வரிசையில் விஜய் சங்கர் (28 ரன், 25 பந்து, 2 சிக்சர்) சற்று போராடிப் பார்த்தார். 19.4 ஓவர்களில் அந்த அணி 137 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஐதராபாத்துக்கு விழுந்த 3-வது அடியாகும். ஹட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள ஐதாரபாத் அணி ஏப்ரல் 21-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ஃபிரிட்ஜை உடைத்த பேர்ஸ்டோ
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியை தழுவிய போதிலும் கூட அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் இணை 7.2 ஓவர்கள் வரை களத்தில் இருந்த நிலையில் 67 ரன்கள் குவித்து மும்பை அணியின் பந்து வீச்சை நொறுக்கி எடுத்தனர்.
இதில் பல முறை ஜானி பேர்ஸ்டோ பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சேஸிங்கின் போது ட்ரெண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் பிரமாதமான 2 சிக்ஸர்களை பேர்ஸ்டோ தூக்கினார். அதில் ஒன்று டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்தது. ஆனால் 2-வது சிக்ஸர் லாங் ஆனுக்கு தூக்கி அடித்தார் பேர்ஸ்டோ. அவர் சிக்ஸர் அடித்த பகுதியானது சன்ரைசர்ஸ் அணியினரின் டக் அவுட் பகுதியாகும் . பேர்ஸ்டோ தூக்கிய சிக்ஸானது அங்கிருந்த ஃபிரிட்ஜ் ஒன்றை பதம் பார்த்தது. இதில் ஃபிரிட்ஜின் கண்ணாடி நொறுங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.