முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, பாகிஸ்தான் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு மே 3–ந்தேதி வரை தடை

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா அதிகரிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு இன்று முதல் வரும் மே 3-ம் தேதி வரை ஹாங்காங் அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று முதல் வரும் மே 3-ம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக மும்பை -– ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2-ம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து