முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா: சென்னையில் 4 காவலர்கள் உயிரிழப்பு

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் கொரோனா 2-வது அலையில் 4 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். 

முன்களப்பணியாளர்களாக உள்ள காவலர்களில் நாள்தோறும் 13 முதல் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 4 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18-ம் தேதி யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கோட்டூர்புரம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமை காவலர் கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொடுங்கையூரை சேர்ந்த 55 வயதுடைய தலைமை காவலர் முருகேசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்தார்.

அதே போல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த மகாராஜன் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவிற்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையில் 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது கொரோனா 2-வது அலையின் தீவிரத்தை காட்டுவதாக காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து