முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மகாவீர் ஜெயந்தி விழா: கவர்னர் - முதல்வர் வாழ்த்து

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாகாவீர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- 

மகாவீர் ஜெயந்தியின் புனித சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஜெயின் சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, உண்மை மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டு காட்டின. ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

அமைதியான, இணக்கமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.  கொரோனா தடுப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரரின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  பகவான் மகாவீரர்  போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கும். 

அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து