முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் கொரோனா 2-வது அலை: பாக். பிரதமர் இம்ரான்கான் கவலை

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு  குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்றின்  ஆபத்தான அலையை எதிர்த்துப் போராடும்  இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். நமது சுற்றுப்புறத்திலும் உலகிலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம். மனிதகுலத்தை எதிர்கொள்ளும் இந்த உலகளாவிய சவாலை நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து