முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை : தடுப்பூசி மூலப்பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்தியாவிலும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடையால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனக் கூறி தடையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. 

உலகில் அமெரிக்காவே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றும் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட்டால் பிற நாட்டவர்களுக்கு கொரோனா பரவாது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து