முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: நாளை நள்ளிரவு முதல் இமாச்சலில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை 27-ம் தேதி நள்ளிரவு முதல் மே 10-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த இமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இத்தகைய நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இமாச்சல பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. 

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை 27-ம் தேதி நள்ளிரவு முதல் மே 10-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை காங்க்ரா, உனா, சோலன் மற்றும் சிர்மோர் ஆகிய 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிக்க இமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த கட்டுப்பாடு முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து